Skip to main content

சத்யா பாகம் -07

 அணைத்து வேலைகளையும் முடித்து அறைக்குள் வந்து முதலில் என்னை கட்டியனைத்து கழட்ட மனதில்லை இப்படியே தூங்கலாமே என்று கொஞ்சினால், நான் அப்புறம் கொஞ்சலாம் முதலில் கழட்டிவிடு என்று சொல்ல, அவள் சரி என்று என்னை உட்காரவைத்து எனது காதில் இருந்த கம்மளை கழட்டினால் எனக்கு சிறிது வலியாக இருந்தது அது மட்டும் தான், பிறகு எனது  மற்ற உபகரங்களை கழட்டிவிட்டு, நான் எனது ஊடகளை மாட்டிக்கொண்டேன். என் விரல்களில் இருந்த நைல் பாலிஷ் மட்டும் காலையில் எடுத்து விடுகிறேன் என்று கூறி இருவரும் படுக்க சென்றோம். மறுநாள் காலை நான் எழுந்து பார்த்த போது என் மனைவி கிட்சேனில் வேலை செய்து கொண்டிருந்தாள் எனது மகன் வெளியில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தான். நான் மெல்ல என் மனைவியை அழைத்து நைல் பாலிஷ் ரெமூவ் பண்ண சொல்லி உதவி கேட்டேன், அவள் angir🙏🏼வந்து இப்படியே இருக்கட்டும், வேறு டிரஸ் பண்ணும் போது இதே நல்லா இருக்கும் என்றால். நான் அவளிடம் இல்லை நான் இன்று வெளியில் செல்ல வேண்டும், இதை வைத்து கொண்டு வெளியே போக முடியாது என்று சொல்லி அவளிடம் சிறிது கோவத்தோட கேட்டேன்.அவள் சரி அப்போ போய்ட்டு வந்து எனக்கு உதவுங்கள் என்று சொல்லி எனது கைகள் மற்றும் கால்களில் இருந்த நைல் பாலிஷ் எடுத்து விட்டால். நானும் குளிக்க சென்று எனது உடைகளை அணிந்து விட்டு வெளியே சென்று, எனது மனைவியின் ஆசிரியைக்கு போன் செய்து என்னுடைய நிலைமையை எடுத்து பேசி கொண்டிருந்தேன்.அவர் என்னை அவரது வீட்டிற்கு வரும்படி என்னை கேட்டு கொண்டால். நானும் அவளின் வீட்டிற்கு சென்று அவளை அழைத்தேன், அவளும் வெளியே வந்து என்னை அழைத்து உள்ளே சென்றோம். என்னை உட்காரவைத்து எனக்கு குடிக்க ஏதும் எடுத்து வர உள்ளே சென்றார். நான் வீட்டை என் கண்களால் சுற்றி பார்த்தேன், நிறைய மெடல் களும், போட்டோ பிரேம் மாட்டி இருந்தது. அவரது குடும்ப போட்டோவில் என்னால் பார்க்கும் பொழுது அவருக்கு இரண்டு மகள் இருப்பதை புரிந்து கொண்டேன். அவர் என்னிடம் குடிப்பதற்கு  ஒரு கிளாஸ் ஜூஸ் கொடுத்தால். நானும் வாங்கி கொண்டு அவளிடம் நிறைய விருது வாங்கிருக்கிங்க, பார்க்க நல்லா இருக்கு என்று சொல்லி, எனது குழப்பதை அவளிடம் கூறினேன். அவளோ சிரித்து மார்னிங் கொண்டு, இது நீங்கள் உங்கள் மனைவிக்காக இதை செய்வதாக நினைத்தால் ஊடகளில் மாற்றம் பார்க்க மாட்டீர்கள், உங்கள் மனைவி மிகவும் திறமை உள்ளவர், அவளுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு, அவள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறாள் என்று என்னிடம் கூட்டினால். நான் அவளிடம் எனக்கு எல்லாம் புரிகிறது ஆனால் எனது மகன் என்ன நினைப்பான், அருகில் உள்ளவர்கள் இதை பற்றி தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு சற்று பயமாக இருக்கிறது என்று அவளிடம் புலம்பினேன். அவள் சிரித்து கொண்டே நீங்க உங்களையும் உங்க குடும்பத்தையும் பாருங்கள் மற்றவர்கள் பற்றி சிறிதும் யோசிக்காதீர்கள், அவர்களால் நமக்கு எதுவும் நடக்க போவதில்லை என்று சொல்லி, நீங்க விருப்ப பட்டால் நாளை நான் உங்க வீட்டுக்கு வருகிறேன், என்னோட மற்றோருவரும் வருவார் அவரை நீங்க பார்த்து பேசினால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்றால். நானும் சிரிது தயக்கத்தோடு சரி வாருங்கள் நாளை சந்திப்போம் என்று சொல்லி கிளம்பினேன். என்னிடம் வேளைக்கு போறீங்களா என்று கேட்டால், நான் இல்லை மனம் சரி இல்லை நான் வீட்டிற்கு தான் செல்கிறேன் என்று கூறினேன். அவளும் சரி உங்கள் குழப்பம் தீர்ந்தால் உங்கள் மனைவிக்கு உதவுங்கள். பெரும்பாலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அவர்களுடைய தங்கை, மகள் இருந்தால் அவர்களுக்கு செய்து பார்த்து பழகுவார்கள் இல்லாத பட்சத்தில் கணவர்கள் தான் அவர்களுக்கு உதவ முடியும். நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று சொல்லி, நீங்கள் நேற்று போட்டிருந்த சுடிதார் ல கூட நல்லா இருந்தீங்க என்று சொல்லி சிரித்தாள். நானும் சிரித்து அவளுக்கு நன்றி சொல்லி கிளம்பினேன். மதியம் வீட்டுக்கு போகும் போது எனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வீடு சென்றேன். எனது மனைவியும் சற்று நேரம் கழித்து வீடு வந்தால். என்னிடம் ஏன் ஏதோ யோசித்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால்.நான் அவளிடம் நான் உனது மேக்கப் ஆசிரியை சந்தித்து வந்தேன், அவர் நாளைக்கு வீட்டுக்கு வருவதாக சொல்லிருக்காங்கனு சொன்னவுடன், அவள் சந்தோசமா என் அருகில் உட்கார்ந்து என்ன சொன்னாங்க,இங்க வர எப்படி ஒதுக்கிட்டாங்க, நீங்கள் எதுக்கு அவஙகள பாக்க போனீங்க அப்டினு நிறைய கேள்விகள் அடுக்கி கொண்டு போனால். எனக்கு குழப்பமா இருந்துச்சுனு போனேன் அவ்ளோதா சொல்லி எழுந்தேன். அவள் என்னை பிடித்து நான் உங்களை கஷ்ட படுத்துறேன் என்று நினைக்குறீங்களா? என்று கேட்டால். அப்படிலம் இல்லை, உன் சந்தோஷத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்லி உள்ளே சென்றேன். அவள் சிறிது நேரம் கழித்து என்னிடம் வந்து நீங்கள் சொன்ன வார்த்தை எனக்கு ஒரு விதமான நம்பிக்கை கொடுக்கிறது, ஆனால் குழப்பமா இருக்கு என்று சொல்லி புலம்பினால்

Comments

Post a Comment

Popular posts from this blog

சத்யா பாகம் - 1

 அனைவருகும் வணக்கம், எனது முதல் கதை இது. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொது கதைக்கு செல்வோம். சத்யா பாகம் 1  எனது பெயர் சத்தியபிரகாஷ், எனக்கு வயது 31, திருமணம் ஆகி ஒரு 5 வயது மகன் இருக்கிறான். அவன் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். எனது மனைவி பெயர் ரேவதி வயது 29.நான் சென்னையில் ecr ல வாடகைக்கு வசித்து கொண்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரிகிறேன். எனது மனைவி ரொம்ப நாள் என்னிடம் சண்டையிட்டு சென்னையில் தனி வீடு ஒன்றை பார்க்க சொல்லி ஒரு வருடம் முன் வந்து சேர்ந்தால். எங்களது வாழ்வும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. என மனைவிக்கு வீட்டில் இருக்க மனதுக்கு பாரமாக இருக்கிறது நானும் ஏதேனும் வேலைக்கு செல்கிறேன் என்று என்னிடம் கேட்டு என்னை வெகு நாட்களாக என்னை துன்புறுத்த செய்தால். ஒரு நாள் வேல முடிந்து வீட்டிற்கு வந்த போது மறுபடியும் என்னிடம் அதை கேட்க, நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன்.  வீட்டில் இருந்து பையன மட்டும் பார்த்தால் போதும் எனக்கு நல்ல சம்பளத்துடன் வேளை இருக்கிறது, அது போதும் நாம் சந்தோசமா இருக்கலாம் என்...
 Hi to all, If you guy's are having any suggestions or feedback let me know. I believe that no one like the story,  If yes let me know I will close this page permanently. Thank you all in advance . 

சத்யா பாகம் -31

 நேத்து புடவை கட்டியிருந்தேன் என்று சொல்லி அவளிடம் அந்த சாறி எடுத்து காட்டினேன். அவள் அதை பார்த்து அங்கிள் புடவை நல்லா இருக்கு எப்போ எடுத்தது, ஏதும் போட்டோ இருக்கா நீங்க புடவை கட்டியிறுக்க மாதிரி என்று கேட்க, நானும் இருக்கு என்று சொல்லி என் போனை எடுத்து நேற்று எடுத்த போட்டோகளை எடுத்து காட்டினேன். பார்த்த அவள் அதை பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லி சிடித்தால். நானும் நன்றி தெரிவித்து அவளை முதலில் டாப்பை போட்டுக்கோ என்று அவளிடம் எடுத்து கொடுத்துவிட்டு நானும் என்னோட டாப்பை போட்டுக்கொண்டு இருவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றால். நானும் என் வேலைகளை துடங்க என் மாணவியிடம் சொல்லி போகும் முன், என்னிடம் சாயங்காலம் வெளியே போகணும் முடிச்சிட்டு சொல்லுங்க, நானும் ரெடி ஆகுறேன் என்று சொல்ல, நான் அவளை பார்த்து வெளியே போணுமா? எங்க? என்று கேள்விகளை அடுக்கினேன் பதட்டமாக. அவள் என்னை பார்த்து எதுக்கு இப்போ இவ்ளோ பதட்ட படுறீங்க? முன்னாடியே முடிவு பண்ணது தானே, அடுத்த வரதுக்குள்ள தாலி பிரிச்சு கோக்கணும் நியாபகம் இருக்கா உங்களுக்கு? அதுக்கு ட்ரெஸ் அப்புறம் உங்களுக்கு...