நீ சொல்றது சரி சஞ்சனா ஆனால் நேற்று வெளிய போனது கொஞ்சம் டயடா இருந்துச்சு அதனால் இப்போ சுடிதார் போட்டுக்கிட்டால் நல்லா இருக்கும் என்று நினைத்து போட்டுக்கிட்டேன் என்று சொல்ல, சரிகா புரியுது ஆனால் நீங்க எந்த அளவுக்கு புடவை காற்றிங்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு பழகிடும் அதுக்கு அப்புறம் நேத்து இருந்த மாதிரி உங்க உடல் இருக்காது, என்று சொல்ல நானும் சரி என்று சொல்லி சிரித்தேன். பிறகு கார்த்திகா அக்கா என்னிடம் சரிடி நான் அப்புறம் கால் பண்றேன்என்று சொல்லி தூண்டிதார். பிறகு என் மாணவியிடம் சென்று நடந்ததை சொன்ன போது அவளும் சிரித்தாள், நான் தான் சொன்னனே என்று. பிறகு நான் அவளிடம் என் வேலை கொஞ்சம் ஆரம்பிக்கவா என்று கேட்க அவள் இருங்க, உங்க கைல வளையல், காதுல தோடு போடாம இருக்கீங்க என்று சொல்ல நானும் என் காதை தொட்டு பார்த்து ஆமா நைட் கழட்டி மறந்துட்டேன் போட என்று சொல்ல அவள் சரி இருங்க இந்த சுடிதார்கு நான் சின்ன ஸ்டட் தரேன் போட்டுக்கோங்க என்று சொல்லி என் கைகளில் குண்டு மணி போன்ற இரண்டு தோடுகளை கொடுத்து போட்டுக்கோங்க என்று கொடுத்தால். நானும் என் ரூமிற்கு சென்று இரவு கழட்டி வைத்திருந்த வளயல்களில் இருந்து இரண்டு வளையல் எடுத்து என் கைகளில் போட்டுகொண்டு, அந்த தோடை கண்ணாடி முன் நின்று என் கத்துகளில் மாட்டி திருகாணிகளை போட்டு இருபுறமும் பார்த்து என் லேப்டாப் எடுத்து ஓபன் செய்த போது நிறைய ஈமெயில் வந்திருந்தது, நானும் ரிப்ளை செய்து முடித்து கடைசியாக என் மேனேஜர் ஸ்ருதி இன்னும் இரண்டு மாதங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும்படியும் இன்னும் கட்டிட வேலை முடியவில்லை என்று பார்த்தவுடன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆனது, இந்த மாரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்படி போக போறோம் என்று கவலையில் இருந்த எனக்கு பெரிய விஷயம் போல் இருந்தது. உடனே கதவை திறந்து கத்திக்கொண்டே என் மனைவியை தேடி கிட்சேன் சென்ற போது எனக்கு பேரதிர்ச்சியாக பக்கத்து வீட்டு பிரியா அக்காவின் சின்ன மகள் காயத்ரி நின்று கொண்டிருந்தால் என் மனைவியிடம் பேசிக்கொண்டு. அதை பார்த்த நானும், காயத்ரியும் அதிர்ச்சியில் நிற்க்க என் மனைவி என்ன ஆச்சு எதுக்கு இப்போ கத்திட்டு வரீங்க என்று கேட்டால். நான் ஏதும் பேசாமல் அமைதியாக கூச்சட்டதோட நின்று கொண்டிருப்பதை பார்த்த காயத்ரி அங்கிள் நீங்க எப்போ சுடிதார் போட அரும்பிச்சீங்க? என்று கேட்க என் மனதில் பதட்டம் அதிகம் ஆனது.
எனக்குள் என்னடா இப்டி மாட்டிக்கிட்டோமே ஒரு சின்ன பெண்ணிடம் நான் எப்படி சொல்றது என்று தெரியாமல் என் மனைவியை பார்க்க அவள் சிரித்து கொண்டே நின்று கொண்டிருந்தாள். பிறகு என்னிடம் சொல்லு சத்யா கேட்கறால் ஏன் சுடிதார் போட்ருக்கீங்க, நீங்க புடவை கூட காட்டுவீங்க என்று சொல்லி சிரிக்க காயத்ரி என் மனைவியை பார்த்து என்னங்கா சொல்றீங்க, அங்கிள் புடவை கடியிருந்தாரா? என்று ஆச்சர்யபட்டால். நான் என் மனைவியை பார்த்து முறைத்தபோது,என் கண்களில் தானாக கண்ணீர் வடிய ஆரம்பித்தது, அதை கவனித்த என் மனைவி, அச்சச்சோ என்ன ஆச்சு இப்போ எதுக்கு அழறீங்க என்று என் அருகில் வந்து என் கங்களை துடைத்து, இங்க வாங்க என்று சொல்லி அருகில் இருந்த சோபா மீது உட்காரவைத்து என்ன ஆச்சு என்று மறுபடியும் கேட்க, எனக்கு வார்த்தை வரவில்லை மறுபடியும் என் கண்களில் நீர் காசிந்து இறங்கியது. அதை பார்த்த என் ரேவதி, துடைத்து விட்டு அவள் கண்களும் கலங்க ஆரம்பத்தது, அதை பார்த்த எனக்கு வருத்தம் ஏற்பட, அவள் கண்களை துடைத்து ஒன்றும் இல்லை என்று சொல்லி என் கண்களையும் துடைத்து, காயத்ரியை பார்த்த போது அவளும் ஒரு விதமான
பதட்டத்தில் இருப்பது எனக்கு புரிந்தது, நான் அவளை பார்த்து ஒண்ணுமில்ல காயத்ரி நான் கொஞ்சம் உணர்ச்சிவச பட்டுட்டேன் என்று சொல்லி என் கண்களை துடைத்து கொண்டிருக்கும் போதே என் அருகில் வந்து அங்கிள் சாரி நான் ஏதும் தப்பா பேசியிருந்தால் என்று சொல்லி, நான் இங்க வந்திருக்க கூடாது தப்பா எடுத்துக்காதீங்க என்று அவள் சொன்னவுடன் எனக்கு ஒரு மாரி குற்றவுணர்ச்சியோடு அவள் கைகளை பிடித்து, அப்டிலாம் இல்லப்பா ஏன் இவ்ளோ பீல் பண்ற, விடு நான் உன்ன பாத்த உடன் எனக்கு பதட்டம் அவ்ளோதான், வேறு ஒன்றும் இல்லை நீ வருத்தப்படாத அங்கிள் இப்போ ஓகே தான், என்று சொல்லிக்கொண்டே அவளிடம் அங்கிள் எப்படி இருக்கேன் இந்த ட்ரெஸ்ல என்று அவளிடம் எழுந்து நின்று அழுகை சிரிப்பு கலந்த முகத்தோடு அவளை கேட்டேன். அவளும் சிரித்து கொண்டே சூப்பரா இருக்கு அங்கிள் என்று சொல்லி என்ன கட்டியணைத்து கொண்டால். அவள் கட்டியணைத்த அந்த நொடி எனக்குள் ஒரு விதமான அக்கா, தங்கை கொஞ்சுவதை போல உணர்ந்தேன். என்னென்றல் இங்கு குடி வந்த நாட்களில் இருந்து நான் இவர்கள் உடன் அதிகம் பேசியது இல்லை அப்படியிருந்தும் அவள் என்னை கட்டி பிடித்து அழறதை பார்த்து என் கண்கள் மறுபடியும் கலங்கியது. கண்களை துடைத்து கொண்டு, அவள் தோளில் தட்டிக்கொடுத்து தேங்க்ஸ் காயத்ரி என்று சொல்ல, அவள் என் முகத்தை நிமிர்ந்து பார்த்து பரவா இல்லை அங்கிள் என்று சொல்லி என் மனைவியிடம் அக்கா அங்கிள் அழகா தான இருக்கிறார் என்று கேட்டு, என் பையனை தூக்கி டாடி எப்படி இருகாங்க என்று கேட்டதற்கு அவனோ வெட்க பட்டுகிட்டே நல்லாயிருக்கு என்று சொல்லி வெட்க பட்டு முகத்தை திருப்பினான். நாங்கள் எல்லோரும் சிரித்து, நான் அவனை தூக்கி முத்தமிட்டு அவனிடம் டாடி முகம் இப்போ நல்லா இருக்கா தங்கம் என்று கேட்டு, ஒரு முத்தம் கொடு என்று கேட்க அவனும் என் இரண்டு கண்ணகளிலும் முத்தமிட எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது, நானும் அவனுக்கு முத்தமிட்டு கிழே இறக்கிவிட்டு என் ஷாளை என் இரண்டு கைகளாலும் அட்ஜஸ்ட் செய்தேன். அதை பார்த்த காயத்ரி பரவா இல்லை அங்கிள் ட்ரெஸ் நல்லா ஹண்டல் பண்றீங்க என்று சொல்லி, என் மாணவியிடம் எப்படி அக்கா அங்கிளை இப்டி ட்ரெஸ் பண்ண வச்சீங்க? இங்க பாருங்க உங்க கலயாணம் போட்டோல எப்படி இருக்காரு தாடி, மீசையோட அழகா இருக்காரு, இப்போ அத விட கொஞ்சம் கூட குறையமா ரொம்ப அழகா இருக்காங்க பாருங்க என்று என் மாணவியிடம் ஆச்சர்யமா கேட்டால். என் மனைவி சிரித்துக்கொண்டே அது ஒரு கதை நான் அப்புறம் சொல்லறேன் இப்போ கொஞ்சம் கிட்சேன்ல வேலை இருக்கு அத செய்ய போறேன் என்று எழும் பொழுது என்னிடம் நீங்க எதுக்கு கத்திகிட்டே ஓடி வந்திங்க என்று கேட்க, நான் தயங்கிக்கொண்டே, அது எனக்கு இன்னும் இரண்டு மாதம் வீட்டிலிருந்து வேலை பார்க்க சொல்லி ஈமெயில் வந்திருக்கு அத சொல்ல தான் வந்தேன், வந்தப்போ தான் காயத்ரிய பார்த்து அதிர்ச்சியாகி இவ்ளோ நடந்துச்சு என்று சொல்லி முடிக்க, அவள் அதற்கெனன இப்போ, அதுக்கு ஓடி வந்திங்களா என்று சாதாரணமா கேட்டால். நான் அவளை பார்த்து என்ன இப்டி சொல்லற, நான் தய்கத்தோட இருந்தேன் எப்படி வேளைக்கு போக போறோம் இந்த மாரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு என்று இப்போ இரண்டு மாதம் பிரச்சனை இல்லை என்று சொல்ல என் மனைவி காயத்ரியை பார்த்து சிரித்தாள், எனக்கு ஒன்றும் புரியவில்லை, எதுக்கு இப்போ சிரிக்கிற என்றவுடன், அவள் அப்போ இன்னும் இரண்டு மாதம் சத்யா மேடம் ஹாப்பி தான், இனி குடும்ப தலைவி நீங்கதான் என்று சொல்லி கிண்டல் செய்தால். நான் அவளை முறைத்தபோது அவள் சிரித்து கொண்டே பரவா இல்லை கொஞ்ச நேரம் இவ கூட பேசிட்டு இருங்க நான் வேலையை முடித்துவிட்டு வரேன் என்று சொல்லி கிட்சேன் சென்றால்.
காயத்ரி என் கைகளை பிடித்து வாங்க அங்கிள் உட்காந்து பேசுவோம் என்று என்னை சோபாவில் உட்காரவைத்து என் ஷாளை எடுத்து முன் வைத்து உட்காரணும் என்று சொல்லிக்கொண்டு என்னை உட்காரவைத்து, அவள் நின்று கொண்டே என் நெற்றியில் உங்க பொட்டு கொஞ்சம் விலகி இருக்கு இருங்க சரி செய்கிறேன் என்று சொல்லி அதை எடுத்து என் நெற்றியில் நடு பகுதியில் அழுத்தி வைத்துவிட்டால். பிறகு என் கண்களில் கண் மை அழிந்ததை அருகில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து துடைத்து, கண்மை எங்க இருக்கு அங்கிள் அக்கா ரூம்லயா என்று கேட்ட்க நானும் ஆமா என்று சொல்ல இருங்க வரேன் சொல்லி உள்ள சென்று கண்மை மற்றும் லிப்ஸ்டிக் எடுத்து வந்து முதலில் கண்மையும் பிறகு என் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுவிட்டு அட்ஜஸ்ட் செய்ய சொன்னால். நானும் என் உதடுகளை உதடால் தடவி சரி செய்தேன் இப்போ ஓகே அங்கிள் எல்லாம் கலஞ்சி போச்சு இப்போ சரியா இருக்கு என்று சொல்லி உள்ள சென்று எடுத்து வந்த பொருளை வைத்து என் அருகில் வந்து உட்கார்ந்து, அங்கிள் நான் ஒன்னு சொல்வேன் நீங்க தப்பா எடுத்துக்க கூடாது என்று சொல்ல, நான் அவளை பார்த்தேன் ஒரு தயக்கதோடு, ஷாக் ஆகாதங்க ஒன்னும் இல்லை நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எனக்கு உங்களுக்கு ஒரு முத்தம் கொடுக்கணும் போல் இருக்கு ஒரு தங்கயாக கொடுக்கவா என்று கேட்க என் மனம் பூரித்து சிரித்து கொண்டே என் தங்கச்சிக்கு இல்லாத உரிமையை கொடுமா என்று என் கன்னத்தை திருப்பி காட்டினேன். அவளும் முத்தமிட்டு கஸ்தூரி மஞ்சள் வாசம் நல்லா வருது மஞ்சள் போட்ருக்கீங்களா என்று கேட்க நான் தலை குனிந்து ஆமா என்று அசைத்தேன். அவள் வாயில் கை வைத்து அங்கிள் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு உங்க முகம் பல பலவென இருக்கு, எங்க அம்மா என்னிடம் போட்டு குளிடி டெய்லி பிரச்சனை பண்ணுவாங்க எனக்குபோட்டு குலுச்சா முகம் மாரி விடுமோ என்று பயம் ஆனால் உங்க முகத்தை பார்க்கும் போது இன்னும் அழகு கூடும் போல் என்று கிண்டல் செய்து, மஞ்சள் போட்டால் மீசை தாடி வளரமா போய்டும்ல என்று என்னிடம் என் கன்னத்தை தொட்டு கேட்டால். நான் அவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தேன். புரிந்து கொண்ட அவள் ஓகே அங்கிள் பரவா இல்லை விடுங்க முடிதான போனா போது என்று சொல்லி, நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அங்கிள் இப்போ எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு உங்களை இப்டி பார்க்க என்று சொல்லி என்னை மறுபடியும் கட்டியனைத்தால் நானும் அவளை கட்டியணைத்து தேங்க்ஸ் காயத்ரி நான் ஆரம்பத்தில் ரொம்ப பயந்துட்டேன் எங்க என்னை தப்பா நெனச்சுடுவியோ என்று அதான் உணர்ச்சிவசப்பட்டு அழுத்துட்டேன் சாரி என்று அவளிடம் சொல்ல அவள் பரவா இல்லை விடுங்க இப்போவாவது என்னிடம் பேச ஆரம்பிச்சீங்களே அது போதும் என்று சொல்லி என் மாணவியிடம் அக்கா நான் அங்கிள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு வரட்டா என்று கேட்க, எனக்கு வாரீபோட்டது.
Wow, great super super
ReplyDeleteSathya bayapadra ovvuru vishayam um supportive a maaruthu
Ellaru koodayum unna oru ponna irukkurua feel romba super
Next Priya akka voda support um kedaikum avangalayum sethu oru gang create pannunga
Apdiye avanga husband a um girls gang la sethukonga
Waiting next part
Chinna request, konjam periya part a upload panringala please read pannikitte irukkanum pola irukku.
Innum neraya girly activities try pannunga
Ethachum function or girls get together